/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்
/
ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்
ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்
ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்
ADDED : ஆக 25, 2025 03:33 AM
குளித்தலை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்-தவர் தாரணி, 23; டெக்ஸ் கம்பெனியில் வேலைசெய்து வரு-கிறார். இவர், தரகம்பட்டியில் முருகேஷ் என்பவர் நடத்தி வந்த, 'ஜெயகணபதி சிட்ஸ்' நிறுவனத்தில், கடந்த, 2022 அக்., 23ல் சீட்டு சேர்ந்துள்ளார். அன்று முதல் மாத தவணையாக, 25,000 ரூபாய் என, 18 மாதம், 4 லட்சத்து, 60,000 ரூபாய் செலுத்தி-யுள்ளார்.
பண தேவைக்காக, கடந்த, 2024 மார்ச், 23ல் கட்டிய பணத்தை ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்த தொகையை தரும்படி, நிறு-வன உரிமையாளர் முருகேஷிடம் கேட்டும் தராததால், பாதிக்கப்-பட்ட தாரணி, சிந்தாமணிப்பட்டி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, ஜெயகணபதி சிட்ஸ் பண்ட் நிறுவன உரிமையாளர் முருகேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.
இதில், முருகேஷ், குளித்தலை தனியார் பள்ளி தாளாளர் மற்றும் மகளை தாக்கி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்-யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்-தக்கது.