ADDED : ஆக 25, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பிரம்ம குமாரிகள் விஷ்வ மஹாதானி பவன் சார்பில், உலக சகோ-தரத்துவ நாள் மற்றும் ராஜயோகினி தாதி பிரகாஷ் மணிஜியின், 18வது நினைவு நாளையொட்டி, மண்மங்கலம் அலுவலகத்தில் நேற்று, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அதில், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு, இலவசமாக மருத்துவ பரிசோத-னைகள் செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் சாரதா, டாக்டர்கள் பாஸ்கர், திருமலைசாமி, கருப்பையா, அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.