/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி
/
இன்று கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி
ADDED : ஜூலை 30, 2025 01:45 AM
கரூர், கரூர் அருகே, நாட்டு கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று (30ல்) நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு நாட்டு கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், நாட்டு கோழி வளர்ப்பு முறைகள், கோழி வீட்டமைப்பு, தீவன மேலாண்மை உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில், பல்கலை கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில், ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இன்று விவசாயிகள் நேரடியாக ஆராய்ச்சி நிலையம் வந்தும், பயிற்சியில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.