sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காந்திகிராமம் சாலை ஆக்கிரமிப்பு; போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

/

காந்திகிராமம் சாலை ஆக்கிரமிப்பு; போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

காந்திகிராமம் சாலை ஆக்கிரமிப்பு; போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

காந்திகிராமம் சாலை ஆக்கிரமிப்பு; போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்


ADDED : பிப் 14, 2025 07:16 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், தெற்கு காந்திகிராமம் டபுள் டேங்க் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

கரூர், தெற்கு காந்தி கிராமம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 1998ல், கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள டபுள் டேங்க் அருகில், 60 அடி சாலையில் மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில், விநாயகர் கோவில் எதிரில் காய்கறி கடைகள் அமைத்துள்ளனர். இவர்கள் காலை, 10:00 மணிக்கு காய்கறிகளை விற்பனை செய்து விட்டு சென்று விடுவது வழக்கம்.

தற்போது சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து, நிரந்தரமாக கடைகளை அமைத்து விட்டனர். 60 அடி சாலை மெல்ல மெல்ல சுருங்கி, 20 அடி சாலையாக மாறி விட்டது. நடைமேடை முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். காலை நேரத்தில் நடை பயிற்சி செல்பவர்களுக்கு, ஓய்வெடுக்க வசதியாக சிமென்ட் இருக்கைகள் இருந்தன. அதனை, ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விட்டனர்.

சாலை குறுகலாகி விட்டதால், பள்ளி வாகனங்கள், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் விபத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us