ADDED : பிப் 23, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் மாவட்டம் புலியூர் அருகில் ஒடமுடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாந்தோணி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி உள்பட பலர் பங்கேற்றனர்.