/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செப்.30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
செப்.30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 26, 2024 03:22 AM
செப்.30ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர், செப். 26--'வரும், 30ல் கரூரில் காஸ் (எரிவாயு) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 30 மாலை, 4:00 மணிக்கு, அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கும். மாவட்டத்தில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு தொடர்பாக வரும் புகார்கள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்தப்படும். எனவே, குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

