sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

/

கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை


ADDED : டிச 03, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம்

கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை

கரூர், டிச. 2-

கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, குறைதீர் முகாம் நாளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை, வெள்ளியணை சாலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும், திங்கள் கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதில், பங்கேற்க அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், வாங்கல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பஸ் மூலம் கரூர் டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல்லுக்கு செல்லும் வேறு பஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஸ் மூலம் சுங்ககேட்டில் இறங்கி, வேறு பஸ் மூலம் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும். இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, பாளையம் மற்றும் திண்டுக்கல்லுக்கு குறைந்தளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் திங்கள் கிழமைகளில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்கள் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல, போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

எனவே, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கும், திங்கள் கிழமையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது அதன் வழியாக, கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us