/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : அக் 24, 2024 01:09 AM
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
கரூர் அக். 24-
சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நான்கு லட்சத்து, 53 ஆயிரத்து, 313 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 62.10 ரூபாய், அதிகபட்சமாக, 76.19 ரூபாய், சராசரியாக, 70.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,006 கிலோ எடையுள்ள நிலக்கடலை, நான்கு லட்சத்து, 53 ஆயிரத்து, 313 ரூபாய்க்கு
விற்பனையானது.