sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

/

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : அக் 24, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

ரூ.4.53 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர் அக். 24-

சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நான்கு லட்சத்து, 53 ஆயிரத்து, 313 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 62.10 ரூபாய், அதிகபட்சமாக, 76.19 ரூபாய், சராசரியாக, 70.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,006 கிலோ எடையுள்ள நிலக்கடலை, நான்கு லட்சத்து, 53 ஆயிரத்து, 313 ரூபாய்க்கு

விற்பனையானது.






      Dinamalar
      Follow us