/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : அக் 17, 2024 03:06 AM
கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.34 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதி-களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்-களை விற்ப--னைக்கு கொண்டு வந்தனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியா-பாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர். விவசா-யிகள், 98 மூட்-டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.29 ரூபாய், அதிகபட்ச-மாக, 77.89 ரூபாய், சராசரியாக, 76.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,341 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 152 ரூபாய்க்கு விற்ப-னையானது.