/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.2.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.2.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : நவ 06, 2024 07:00 AM
கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, 2.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஏலம் நடக்கிறது. நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர்.அதில், 101 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 71.20 ரூபாய், அதிகபட்சமாக, 78.60 ரூபாய், சராசரியாக, 76.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,653 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 75 ஆயிரத்து, 267 ரூபாய்க்கு விற்பனையானது.