/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.3.17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.3.17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : நவ 20, 2024 01:58 AM
ரூ.3.17 லட்சத்துக்கு
நிலக்கடலை ஏலம்
கரூர், நவ. 20-
கரூர் மாவட்டத்தில், மழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. கடந்த மே, ஜூன் மாதங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் நிலக்கடலையை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை உள்பட ஊராட்சி ஒன்றியங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி
செய்யப்படுகிறது.
சாகுபடியாகும் நிலக்கடலை, நொய்யல் அருகே உள்ள சாலைப்புதுார் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி நேற்று நடந்த ஏலத்தில், 129 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 68.59 ரூபாய், அதிகபட்சமாக, 78.19 ரூபாய், சராசரியாக, 77.26 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 4,460 கிலோ எடையுள்ள நிலக்கடலை, மூன்று லட்சத்து, 17 ஆயிரத்து, 392 ரூபாய்க்கு விற்பனையானது.