/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டுமல்லி விலை கிடுகிடு கிலோ ரூ.800க்கு விற்பனை
/
குண்டுமல்லி விலை கிடுகிடு கிலோ ரூ.800க்கு விற்பனை
ADDED : நவ 07, 2024 05:48 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் உள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்-பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்-டுமல்லி பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த பூக்கள் தினமும் ஏலத்-திற்காக, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விசேஷ நாட்களில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படும் பூக்களுக்கு, சாதாரண நாட்களில் போதிய விலை கிடைப்பதில்லை.
இந்நிலையில், இன்றும், நாளையும் முகூர்த்த தினம் மற்றும் கந்த சஷ்டி விழாவால், இப்ப-குதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகளவில் குண்-டுமல்லி பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம், குண்டுமல்லி பூ கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், 400 ரூபாய் வரை உயர்ந்ததால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.