/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொங்கணசித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
/
கொங்கணசித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
ADDED : பிப் 21, 2025 07:34 AM
மல்லசமுத்திரம்: வையப்பமலை கொங்கணசித்தர் குகையில், குருவார சிறப்பு பூஜையில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழனன்று குருவார சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பகல், 12:00 மணிக்கு திருநீரு, பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கொன்னையார், மின்னாம்பள்ளி, மரப்பரை, நாகர்பாளையம், கள்ளுபாளையம், குருசாமிபாளையம், கட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.