sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கேரளாவில் திருடிய ஹரியானா இளசுகள் கைது: சித்தோட்டில் மடக்கிய போலீசார்

/

கேரளாவில் திருடிய ஹரியானா இளசுகள் கைது: சித்தோட்டில் மடக்கிய போலீசார்

கேரளாவில் திருடிய ஹரியானா இளசுகள் கைது: சித்தோட்டில் மடக்கிய போலீசார்

கேரளாவில் திருடிய ஹரியானா இளசுகள் கைது: சித்தோட்டில் மடக்கிய போலீசார்


ADDED : டிச 27, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: கேரள மாநிலம் பாலக்காடு அருகே மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் ஹசீனா செய்புதின். இவருக்கு சொந்தமான சுற்றுலா பஸ் உள்ளது. இதில் பொருத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த ஆடியோ சிஸ்டங்களை திருடிக் கொண்டு, ஹரியானா பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரியில், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா செல்வதாக, கேரள மாநில போலீசார், சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் சித்தோடு போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் சத்தி மெயின் ரோடு பகுதியில், பாலத்தின் அருகே தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள போலீஸ் சார் தெரிவித்த லாரி வந்தது. நிறுத்தி சோதனை செய்ததில், திருடப்பட்ட ஆடியோ சிஸ்டம், ஆம்பிளிபையர் மற்றும் நான்கு ஸ்பீக்கர் இருந்தது. பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். ஹரியானா மாநிலத்தை சார்ந்த ஆதில், 28, கதோபி, 38, என தெரிந்தது.

இருவரும் பாலக்காடு பகுதியில் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்ததும், ஹரியானா மாநில லாரி டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us