ADDED : நவ 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழி கழிவுகளால்
சுகாதார சீர்கேடு
கிருஷ்ணராயபுரம், நவ. 20-
கிருஷ்ணராயபுரத்தில், சாலையோரம் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் அருகில், வாய்க்கால் படித்துறை செல்லும் சாலையோர இடங்களில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால், படித்துறை வழியாக குளிக்க செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கோழி கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.