/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்மின் கோபுர விளக்கு டி.என்.பி.எல்., நிதி வழங்கல்
/
உயர்மின் கோபுர விளக்கு டி.என்.பி.எல்., நிதி வழங்கல்
உயர்மின் கோபுர விளக்கு டி.என்.பி.எல்., நிதி வழங்கல்
உயர்மின் கோபுர விளக்கு டி.என்.பி.எல்., நிதி வழங்கல்
ADDED : அக் 21, 2024 07:35 AM
கரூர்: கரூர், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மனிதவள அலுவலகத்தில், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
காகித நிறுவன சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளுக்கு உள்ளடங்கிய பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், பு.தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., பகுதிகளில், 15 உயர் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக, 11 லட்சத்து, 81,000 காசோலை வழங்கப்பட்டுள்ளது.

