/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு
/
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு
ADDED : ஏப் 17, 2025 01:56 AM
கரூர்:வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், நகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, பெரியார் தி.க., ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஹிந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும், ஆபாசமாகவும், அறுவறுக்கதக்க வகையிலும் பேசியுள்ளார். இந்த பேச்சு, ஹிந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பேசிய அமைச்சர் பொன்முடி மீது, காவல் துறை வழக்குப்பதிவு செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* இதேபோல், அரவக்குறிச்சி ஹிந்து முன்னணி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.