sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்

/

ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்

ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்

ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்


ADDED : மார் 05, 2026 07:07 AM

Google News

ADDED : மார் 05, 2026 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:வரும் ஏப்., 28 வரை, 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி., தடுப்பூசி செலுத்தப்படும் என, கலெக்டர் ரவி-குமார் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை-யங்களில், மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம் ஏப்., 28 வரை நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 14 வயது வரை-யுள்ள, 4,501 பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசி கர்ப்-பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு, நோய்களிலி-ருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும், 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்-றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு 28.7 சதவீதம், அடுத்தப்படியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய், 14 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்துவதின் மூலம், 99.7 சதவீதம் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us