/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
/
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : செப் 29, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி, மகன் மாயம்
போலீசில் கணவர் புகார்
கரூர், செப். 29-
கரூர் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரது மனைவி சவுந்தர்யா, 25; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 26ல் ஒரு மாத ஆண் குழந்தையுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
ஆனால், வீடு திரும்பவில்லை. தந்தை மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், சவுந்தர்யா குழந்தையுடன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சவுந்தர்யாவின் கணவர் அரவிந்த், 29; போலீசில் புகார் கொடுத்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.