/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 11, 2024 06:34 AM
கி.புரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சீரான விலையில் வெற்றிலை விற்-பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமா-ரன்பட்டி, கொம்பாடிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
வெற்றிலைகள் பறிக்-கப்பட்டு, லாலாப்பேட்டை வெற்றிலை மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வெற்றிலை வரத்து காரணமாக விலை குறைந்தது. தற்போது முகூர்த்த சீசன் மற்றும் விழா காலம் என்பதால் வெற்றி-லைகள் சீரான விலையில் விற்கப்படுகிறது. கடந்த வாரம், 100 கவுளி கொண்ட மூட்டை, 3,000
ரூபாய்க்கு விற்றது. தற்போது, 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசா-யிகள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர், திருச்சி ஆகிய இடங்களுக்கு வெற்றிலைகள் சில்லரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகி-றது.