/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 15, 2024 03:07 AM
பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர், அக். 15-
கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து மழை காரணமாக, நேற்று முன்தினம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. ஆனால், கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நேற்று வினாடிக்கு, 1,589 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம், 959 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று காலை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சில பகுதிகளில், மழை குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 1.40, அணைப்பாளையம், 2, க.பரமத்தி, 1,20, தோகமலை, 5.20, கிருஷ்ணராயபுரம், 12.50, மாயனுார், 12, பஞ்சப்பட்டி, 3.6, கடவூர், 4, பாலவிடுதி, 5, மயிலம்பட்டி, 6 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 4.41 மி.மீ., மழை பதிவானது.