/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
/
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 26, 2025 04:46 AM
கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, நொய்யல் வாய்க்-காலில், திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகரிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.96 அடியாக இருந்தது. இந்நிலையில், நொய்யல் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட, 19 கன அடி தண்ணீர், வினாடிக்கு, 47 கன தண்ணீராக அதிகரிக்கப்பட்டது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட, தண்ணீர் தற்காலிகமாக நிறுத்-தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 83.44 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை, 57 கன அடி தண்ணீர் வந்தது.
* நேற்று காலை மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 4,517 கன அடி தண்ணீர் வந்தது. சம்பா சாகுபடி பணிக்காக, 3,867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.