ADDED : ஜூன் 26, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி, 2வது வார்டில் உள்ள அரசி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டா-வது வார்டில் அரசி நகர் பகுதி உள்ளது. இப்பகு-தியில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி செய்து தரப்பட்டது. தற்போது அதன் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. மேலும், குடிநீர் இணைப்பு வேண்டி குடியிருப்பு வாசிகள் பலமுறை பேரூராட்சியில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் இருக்கும் இந்த பகுதியில், அடிப்படை வசதி-களை செய்து தர வேண்டும்.
