ADDED : ஜூன் 26, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில், சாக்கடை கழிவுமண் அகற்றும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சா-யத்து வார்டுகளான கொடிக்கால் தெரு சாலை, மாரியம்மன் கோவில் சாலை, நுாலக சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் செல்கி-றது. கால்வாய் துார்வாராததால் கழிவுமண் தேங்கியது. கடந்த வாரம் பஞ்சாயத்து சார்பில் சாக்கடை வாய்க்காலில் தேங்கிய கழிவு மண் அகற்றப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, கள்ளப்பள்ளி பஞ்-சாயத்து சார்பில் சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுமண்ணை பொக்லைன் இயந்திரம் கொண்டு அள்ளப்பட்டு, டிராக்டரில் ஏற்றி
அப்புறப்படுத்தப்பட்டது.
