/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்
/
நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்
நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்
நோயாளிகள் 'இன்ஜக்ஷன்' போட தனி அறை ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2024 02:54 AM
குளித்தலை: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அய்-யர்மலை, மாயனுார், தோகைமலை, பஞ்சப்பட்டி, நங்கவரம், தொட்டியம், கொளக்குடி, பவித்திரம் உள்ளிட்ட, 300க்கும் மேற்-பட்ட கிராமங்களில் இருந்து தினசரி பொது மக்கள் இந்த மருத்து-வமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
தினசரி காலை, மாலை என, இருவேளையும் வெளிப்புற நோயா-ளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. ஆனால், சிகிச்-சைக்கு வரும் ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என, அனைவருக்கும் ஒரே அறையில் ஊசி போடுவதால்
சிரமப்படு-கின்றனர். மேலும், நீண்ட வரிசையில் ஆண், பெண் நோயாளிகள் கால்கடுக்க நிற்கின்றனர்.எனவே, ஊசி போட தனி அறை ஒதுக்கி, பெண் நோயாளிக-ளுக்கு பெண் செவிலியர்களும், ஆண் நோயாளிகளுக்கு ஆண்
செவிலியர்களும் ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.