/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
/
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
ADDED : செப் 14, 2025 04:57 AM
கரூர்: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதியில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தங்-கவேல் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு, முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த, 4 ஆண்டுகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்-டங்கள் மூலம், 48.80 கோடி ரூபாய் மதிப்பில், 1,382 வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் லிங்கம்நாயக்கன்பட்டி பஞ்.,ல், முதல்வர் கிராம சாலைகள் மேம்-பாட்டு திட்டத்தின் கீழ் 34.02 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ், 36.50 லட்சம் மதிப்பில் நாற்-றாங்கால் அமைக்கும் பணி உள்பட வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து மக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.