/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
/
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
ADDED : செப் 26, 2024 02:03 AM
கரூர்: தென்னிலை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதியவரை, மிரட்டியதாக கிராம பஞ்., வார்டு உறுப்-பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.கரூர் மாவட்டம், கோடந்துார் தெற்கு கிராம பஞ்., பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 52; இவர் கடந்த ஆக., 15 ல் வெட்டு காட்டு வலசு பகுதியில் நடந்த, கோடந்துார் கிராமசபை கூட்-டத்தில் பங்கேற்று, பஞ்சாயத்து நிதி குறித்து கேள்வி எழுப்-பினார்.
அப்போது, கோடந்துார் கிராம பஞ்., இரண் டாவது வார்டு உறுப்-பினர் நிர்மலா, 48, எழுந்து, துரைசாமியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார், வார்டு உறுப்பினர் நிர்மலா மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

