/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : ஓராண்டு தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு போக்குவரத்து கழக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்ப கோணம், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் இணைந்து இணையதளம் மூலமாக பொறியியல், பட்டயப்படிப்பில், 2020, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து, ஓராண்டு தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம். ஜூலை, 8க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.