/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் இரும்பு கம்பிகள் விபத்து ஏற்படும் அபாயம்
/
சாலையில் இரும்பு கம்பிகள் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மே 18, 2025 06:36 AM
கரூர்: கரூர்-கோவை சாலையில் உடைந்துள்ள, இரும்பு தடுப்பு கம்பி-களை அகற்ற வேண்டும்.
கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே, இரண்டு கி.மீ., துாரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல இடங்களில் தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் உள்ளது. கோவை சாலையில் நுாற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கர வாகனங்களிலும், பொதுமக்கள் செல்கின்-றனர்.
உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், விபத்துகள் ஏற்பட்டு வருகி-றது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், விபத்துகளில் பொதுமக்கள் காயமடைவது தொடர்க-தையாக உள்ளது. எனவே, கரூர்- கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டி-யது அவசியம்.