/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரணி பார்க் கல்வி குழும வளாகத்தில் ஜப்பானிய கலாசார பரிமாற்ற விழா
/
பரணி பார்க் கல்வி குழும வளாகத்தில் ஜப்பானிய கலாசார பரிமாற்ற விழா
பரணி பார்க் கல்வி குழும வளாகத்தில் ஜப்பானிய கலாசார பரிமாற்ற விழா
பரணி பார்க் கல்வி குழும வளாகத்தில் ஜப்பானிய கலாசார பரிமாற்ற விழா
ADDED : டிச 29, 2025 07:38 AM
கரூர்: கரூர் பரணி பார்க் கல்வி குழும வளாகத்தில், உயர்கல்வி மற்றும் அயல்நாட்டு தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாசார பரிமாற்ற விழா நடந்தது. இதில், தாளாளர்
மோகனரெங்கன் தலைமை வகித்தார். ஜூலையில் நடந்த ஜப்பா-னிய அரசின் மொழி தேர்வில், இப்பள்ளியில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பரணி பார்க்க மாணவர்கள், இலக்கணம் மற்றும் வாசித்தல் பிரிவுகளில், 120க்கு, 120 மதிப்பெண்களும், கேட்டல் பிரிவில், 60க்கு, 60 முழு மதிப்பெண்-களும் பெற்று சாதனை படைத்தனர். தற்போது, பரணி பார்க் மாணவர்கள், 150 பேர், ஜப்பானிய அரசின் மொழி தேர்வுக்காக ஸ்ரீசங்கரா ஜப்பானிய மொழிப்பயிற்சி நிறுவனத்தின் உதவி-யுடன் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். ஜப்-பானில் உள்ள நிப்பான் தொழில்நுட்ப பல்கலை-யுடன் இணைந்து சர்வதேச கல்வி பரிமாற்ற திட்-டங்கள் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் செயல்-படுத்தி வருகிறது. சிறப்பு விருந்தினராக பங்-கேற்ற ஜப்பானிய துணை துாதர் மியாட்டா கென்ஜி, ஐப்பானிய அரசின் மொழி தேர்வுக்கு தயாராகி வருவதையும், அவர்களின் அபாரமான ஜப்பானிய மொழி திறனை பாராட்டினார்.
பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், செயலர் பத்மா-வதி, அறங்காவலர் சுபாஷினி, பரணி வித்யா-லயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் உள்-பட பலர் பங்கேற்றனர்.

