ADDED : டிச 29, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, பெரியபாலத்தில் கோட்டை மாரி-யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், பெரியபாலம் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, சபரிமலை மண்டல பூஜை நிறைவையொட்டி, கூட்டு பஜனை விழா நடந்தது. அதில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்த-ருளிய ஐயப்பனை, சரண கோஷங்கள், பக்தி பாடல்கள் முழங்க பஜனை செய்து, படி பூஜை செய்தனர். தொடரந்து, ஐயப்பன் உற்சவர் சிலைக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை காட்டப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், பொது-மக்கள் கலந்துகொண்டு ஐயப்பன் சுவாமி பஜ-னையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஐயப்ப பக்தர்கள் அனைவ-ருக்கும் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

