/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
/
பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
ADDED : டிச 29, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் ஜவஹர் பஜார் பண்டரிநாதன் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், கடந்த, 20 முதல் பகல் பத்து உற்சவம் நாள்தோறும் மாலை நடந்து வருகிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு கோவிலில் மோகினி அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை காலை, 4:00 மணி முதல், 5:00 மணிவரை கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. பிறகு, உற்சவ பெருமாள் சுவாமி திருவீதி உலாவும், ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஏற்பாடுகளை, பண்ட-ரிநாதன் பஜனை மடம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

