/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 29, 2025 07:36 AM
கரூர்: க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பஞ்சாயத்து ஒன்றிய நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், அரசு மேல்-நிலைப்பள்ளி உட்பட, 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், அந்த பகு-தியை சுற்றியுள்ள முன்னுார், குப்பம், பவுத்திரம், நெடுங்கூர், காருடையாம்பாளையம், நடந்தை, ஆரியூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்-துகளில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்-ளன.இப்பகுதியில், உள்ள மக்கள் வேலைக்காகவும், வெளியூர் செல்லவும், வெளியூர்களிலிருந்து பர-மத்திக்கு தினசரி ஏராளமான மக்கள் பஸ்சில் பயணம் செய்கின்றனர். அப்போது நுாற்றுக்கணக்-கான மக்கள் சாலையோரம் பல மணி நேரம் காத்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுவதுடன் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ் ஸ்டாப்பில் நிற்பதால் பல்வேறு பிரச்னைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் நலன்க-ருதி, க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டியது
அவசியம்.

