sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு

/

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி நிறைவு


ADDED : நவ 06, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஜூடோ பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. தமிழக அரசு, பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களாக தற்காப்பு கலையான ஜூடோ பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவியர் எந்த ஒரு சூழ்நிலையையும், பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல், மாணவியர் அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் கீ செயின், துப்பட்டா, பேனா, பென்சில் ஆகியவற்றை கொண்டு ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்து கொள்ளும் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவியர், தாங்கள் கற்ற ஜூடோ பயிற்சியை செய்து காட்டினர்.

பயிற்சியாளர் வித்யா மற்றும் பயிற்சி பெற்ற மாணவியரை தலைமையாசிரியர் சாகுல் அமீது பாராட்டினார். நிகழ்ச்சியில் மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு, ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கிருஷ்ணவேணி, ஜோதிமணி, மேரி பொன் ராணி, ரூபா, தஸ்லீம் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us