/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
கரூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : அக் 08, 2024 04:04 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்க வேல் தலைமையில் நடந்தது.
ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம், 398 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திற-னாளிகளிடம், 38 மனுக்கள் பெறப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இரு பயனாளிகளுக்கு தலா, 63,600- ரூபாய் மதிப்பி-லான நவீன செயற்கை கால்களையும், நான்கு பயனாளிகளுக்கு தேசிய மாற்றுத் திறனாளிக்ளுக்கான அடையாள அட்டை யையும் மாவட்ட வழங்கல், அலுவலகத்தின் சார்பில் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், மாவட்ட மாற்றுத்திறனா-ளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.