/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளர் நலவாரியம் பெயரில் காம் ;கரூர் கலெக்டர் எச்சரிக்கை
/
தொழிலாளர் நலவாரியம் பெயரில் காம் ;கரூர் கலெக்டர் எச்சரிக்கை
தொழிலாளர் நலவாரியம் பெயரில் காம் ;கரூர் கலெக்டர் எச்சரிக்கை
தொழிலாளர் நலவாரியம் பெயரில் காம் ;கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 13, 2024 08:45 AM
கரூர்: தொழிலாளர் நலவாரியம் பெயரில், முகாம்-களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்-படும் என, கலெக்டர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் கீழ், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட, 20 அமைப்பு சாரா தொழி-லாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கண்கண்-ணாடி உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, விபத்து ஊன உதவித் தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கட்டுமான தொழிலாளர்க-ளுக்கான வீட்டுவசதி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், பதிவு செய்ய மற்றும் நலத்திட்டங்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு, www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் மற்றும் பொதுசேவை. இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்-கலாம்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை இணைய தளத்தில் பதிவு செய்ய அணுகும்போது, தங்கள் தொழிற்சங்க பெயரை தெரிவிக்காமல், தொழி-லாளர் நலவாரிய அலுவலகம் என்று தெரிவித்து பதிவு செய்வதோ அல்லது தொழிலாளர் நலவா-ரியம் என தெரிவித்து முகாம்களை நடத்துவதோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறியுள்ளார்.