sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநில அளவில் வரி வசூலில் கரூர் மாநகராட்சி கடைசிக்கு முந்தைய இடம் பிடித்து சாதனை

/

மாநில அளவில் வரி வசூலில் கரூர் மாநகராட்சி கடைசிக்கு முந்தைய இடம் பிடித்து சாதனை

மாநில அளவில் வரி வசூலில் கரூர் மாநகராட்சி கடைசிக்கு முந்தைய இடம் பிடித்து சாதனை

மாநில அளவில் வரி வசூலில் கரூர் மாநகராட்சி கடைசிக்கு முந்தைய இடம் பிடித்து சாதனை


ADDED : டிச 26, 2024 11:52 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், வரி வசூலில் கரூர் கடைசி இடத்திற்கு முந்தைய இடம் (23 இடம் ) பிடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட, 24 மாநகராட்சிகள் உள்ளன. சொத்து வரி, காலிமனை வரி, நிறுவனங்களில் தொழில் வரி, குடிநீர் வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி வரி வருவாயில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில், மாநகராட்சிகளின் வரி வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

இதில், தமிழக அளவில் சிவகாசி மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. இதுவரை நிலுவை வரியாக, 56.31 லட்சம் ரூபாய், நடப்பாண்டில் வரியாக, 15.56 கோடி ரூபாய் என மொத்தம், 16.12 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டு வரி வசூலில், 59.75 சதவீதம். இரண்டாம் இடம் பிடித்த திருச்சி மாநகராட்சி நிலுவை வரியாக, 31.07 கோடி ரூபாய், நடப்பாண்டு வரியாக, 124.01 கோடி ரூபாய் என, 155.09 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதாவது, 54.24 சதவீதம். மூன்றாமிடம் பிடித்த, மதுரை மாநகராட்சி நிலுவை வரியாக, 77.49 கோடி ரூபாய், நடப்பாண்டில் வரியாக, 197.43 கோடி ரூபாய் என மொத்தம், 274.93 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதாவது, 52.13 சதவீதமாகும்.

கரூர் கடைசி இடத்திற்கு முந்தைய இடம்:

மாநில அளவில் கடைசி (24வது) இடத்தை பெற்ற, திருவண்ணாமலை மாநகராட்சி, நிலுவை வரியாக, 3.81 கோடி ரூபாய், நடப்பாண்டில் சொத்து வரியாக, 8.36 கோடி ரூபாய் என மொத்தம், 12.17 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது. அதாவது, 35.31 சதவீதம். கரூர் மாநகராட்சிக்கு நிலுவை வரியாக, 7.02 கோடி ரூபாய், நடப்பாண்டு வரியாக, 18.42 கோடி ரூபாய் என, 25.44 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது. இது, 35.41 சதவீதமாக மாநில அளவில், 23வது இடத்தில் உள்ளது.

ஓசூர் மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து, 54.58 கோடி ரூபாய் வசூல் செய்து, 11வது இடத்தையும், சேலம் மாநகராட்சி நிலுவை, நடப்பு ஆண்டு வரி சேர்த்து, 116.34 கோடி ரூபாய் வசூல் செய்து, 13வது இடத்தையும், ஈரோடு மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து, 58.47 கோடி ரூபாய் வசூல் செய்து, 17வது இடத்தையும், நாமக்கல் மாநகராட்சி நிலுவை, நடப்பாண்டு வரி சேர்த்து, 18.81 கோடி ரூபாய் வசூல் செய்து, 16வது இடத்தை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us