ADDED : செப் 30, 2025 09:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர், வேலுச்சாமிபுரத்தில் செப். 27 இரவு த.வெ.க., பிரசார கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். கூட்டநெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் புகார்படி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த, கரூர் மேற்கு மாவட்ட செயலர்மதியழகனை, போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.