/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானிய விலையில் உரம் விற்பனை: அதிகாரி தகவல்
/
மானிய விலையில் உரம் விற்பனை: அதிகாரி தகவல்
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாலாப்பேட்டை: 'கிருஷ்ணராயபுரம் வட்டார வே ளாண்மை விரிவாக்க மையத்தில் தக்கைபூண்டு பசுந்தா ள் உரவிதைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது' என கிருஷ்ணராயபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு பசுந்தாள் உரவிதைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் விரிவாக்க மையத்துக்கு நேரில் சென்று மானிய விலையில் பசுந்தாள் விதையை பெற்று பயன்பெறலாம்.