/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலம் பணி விரைவில் துவக்க திட்டம்
/
கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலம் பணி விரைவில் துவக்க திட்டம்
கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலம் பணி விரைவில் துவக்க திட்டம்
கரூர் வீரராக்கியம் உயர்மட்ட பாலம் பணி விரைவில் துவக்க திட்டம்
ADDED : ஆக 13, 2025 05:40 AM
கரூர்: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்-டுமான வேலை தொடங்க ஏதுவாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கரூரில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபா-ளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, கரூர்- - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங் கோவில் வளைவு, கரூர் -- திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதி களில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன.
அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதி -களில் சாலை மறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்
சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் போக்கு
வரத்து பாதிக்கப்பட்டு வந்தது. விபத்து ஏற்படும் பகுதிகளில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதன்படி, தேசிய நெடுஞ்
சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்-கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு, மண்மங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்-டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடங்கி
பட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கவுள்ளது.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி
கள் கூறியதாவது: திருச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலை யில், இந்-திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்ப-டுகிறது. வீரராக்கியத்தில், 18.50 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலத்தில் பாலம் பணி நடக்க உள்-ளது. இந்த பாலம் பணி தொடக்க ஏதுவாக, இரண்டு புறங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடி-வடைந்து, அந்த சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விட்ட பின் பாலம் கட்டுமான பணி தொடங்கும்.
இவ்வாறு, அவர்கள், கூறினர்.