sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேலப்பாளையம் முச்சிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

மேலப்பாளையம் முச்சிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மேலப்பாளையம் முச்சிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மேலப்பாளையம் முச்சிலியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 06, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லை அரசு கருப்பண்ண சுவாமி, முச்சிலியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்ததையடுத்து நாளை (7ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு புலியூர் காளியம்மன் கோவிலில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலாவதாக பறை இசை, கொடி அணிவகுப்பு, ட்ரம்ப் செட், சாமி நடனம், பசு, யானை, குதிரைகள், காளை மாடுகள், ஒட்டகங்கள், இளைஞர்களின் சலங்கைஆட்டம், கலசத்துடன்கூடிய வெற்றிலை தேர், மங்கள இசை, கன்னிதீர்த்தம், தம்பதியர் தீர்த்தம், முளைப்பாரி, கரக முளைப்பாரி, பம்பை உடுக்கை என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

மாலையில் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, யாகம், வாஸ்து சாந்தி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு சாந்தி ஹோமம், திஷா ஹோமம், கோபூஜை, மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று ( 6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, அனைத்து மூர்த்திகளுக்கும் எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சி, நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு செந்தில்கணேஷ்- ராஜலெட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக நாளை 7ம் தேதி காலை 5:30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் தட்டையநாட்டு புலியூர் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us