sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்

/

வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்

வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்

வாங்கல் - மோகனுார் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்


ADDED : ஆக 03, 2024 06:39 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த, 2016ல், 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.அப்போது, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்காததால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங் களை சேர்ந்த, பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர்.

மேலும், பாலத்தில் இரவு நேரத்தில் வழிப்பறி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த, 2018ல் பாலத்தில், ஒரு பக்கத்தில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, பெரும்பலான மின் கம்பங்களில், விளக்குகள் சரியாக எரிவது இல்லை.இந்நிலையில், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில், வாங்கல் பாலத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாங்கல்-மோகனுார் உயர்மட்ட பாலத்தில் போடப்பட்ட மின்கம்பங்களில், அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us