sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

/

அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்


ADDED : செப் 06, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, :அனுமதியின்றி மண் கடத்திய, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அடுத்த, குறுதிக்கோன்பட்டி கோரமடை பகுதியில், அரியாறு பாசன பிரிவுக்கு சொந்தமான குளம் உள்ளது. இங்கு அரசு அனுமதியின்றி, பொக்லைன் வாகனம் மூலம் மண் கடத்துவதாக, குளித்தலை உதவி பொறியாளருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் அலுவலக பணி ஆய்வாளர் சுரேஷ், 51, குளத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொக்லைன் இயந்திரத்தில் உரிய அனுமதி இன்றி, மண் எடுத்து சென்னம்பட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் பார்த்திபன், 26, என தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்ததும், அவர் எந்த பதிலும் கூறாமல், பொக்லைனை நிறுத்தி விட்டு தப்பினார்.பின்னர் பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டு, சிந்தாமணிபட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. பார்த்திபன் மீது, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us