/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
/
இ-பைலிங் முறைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
ADDED : டிச 03, 2025 07:48 AM
குளித்தலை, குளித்தலை பார் அசோசியேஷன் சார்பில், அவசர பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இ-பைலிங் நடைமுறைகளில், உடனடியாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
குளித்தலையிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட, கிருஷ்ணராயபுரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்திலும், சங்க உறுப்பினர்கள் அதிகம் செல்வதால், நீதிமன்றம் 5:30 மணியை தாண்டி இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இந்த நடைமுறையை உடனடியாக நீதிபதி கைவிட வேண்டும்.இப்பிரச்னையில் மாவட்ட நீதிபதி தலையிட்டு சரி செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற வளாகத்தில், 'சிசிடிவி' கேமரா உடனடியாக பொருத்த வேண்டும்.
இ-பைலிங் முறை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் 6ம் தேதி வரை குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

