/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிச.,29 முதல் கால்நடை நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
/
டிச.,29 முதல் கால்நடை நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
டிச.,29 முதல் கால்நடை நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
டிச.,29 முதல் கால்நடை நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
ADDED : டிச 24, 2025 09:26 AM
கரூர்: டிச.,29 முதல், கால்நடை நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வரும், 29 முதல் ஜன., 18 வரை, 21 நாட்களுக்கு பசு மற்றும் எருமைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி 8வது சுற்று போடும் பணி நடக்கிறது. விடுபட்ட கால்நடைகளுக்கு ஜன., 19 முதல் 28 வரை தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. இதனால் சினைப்பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிடுகிறது.
இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதில், 75 குழுக்கள் மூலம், 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு, எருமையினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

