/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்
/
வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள்
ADDED : ஜன 02, 2026 04:56 AM
கரூர்: கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவி லில், நேற்று மூன்றாம் நாள்
ராப்பத்து உற்சவத்தில், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்-காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர் அபய பிரதான ரங்க-நாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிந்தது. கடந்த, 30ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று, மூன்றாம் நாள் ராப்பத்து உற்சவத்தில், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று ராமாவதாரம், 3ல் வேணுகோபால கிருஷ்ணன் அலங்-காரம், 4ல் வாமண அவதார அலங்
காரம், 5ல், ராஜதர்பார் அலங்காரம் நடக்கிறது.
6ம் தேதி குதிரை வாகனம், 7ல் ஆண்டாள் திருக்கோலம் அலங்-காரம், வரும், 8 ல் ராப்பத்து, 9ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

