ADDED : அக் 03, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், மத்துாரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 50. வேன் டிரைவரான இவர், கடந்த செப்., 29 இரவு, வாழப்பாடியில் சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு, 30ல், தரகம்பட்டியில் உள்ள ஒரு கடையில் இறக்கினார். தொடர்ந்து செல்லுார் ஸ்ரீரங்கன் வீட்டில், மூட்டையை இறக்கினார்.
பின் வண்டியின் பிளாட்பார்ம் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட முயன்றபோது மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிந்தது. சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.