ADDED : டிச 27, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாட்டரி டிக்கெட்விற்றவர் கைது
அரவக்குறிச்சி, டிச. 27-
சின்னதாராபுரம் பகுதியில், இன்ஸ்பெக்டர் மகாமுனி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். வாய்க்கால் தோட்டம் என்ற இடத்தில், பெட்டிக்கடை நடத்தி வரும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீராம், 28, என்பவர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் பெற்றிருந்த, 8,400 ரூபாயை சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.