/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வைக்கோல் விலை குறைவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி
/
வைக்கோல் விலை குறைவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ADDED : ஜன 02, 2025 07:34 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை சமீபத்தில் துவங்கியுள்ளது. கடந்தாண்டு முன்-கூட்டியே, வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியது.
டிச., இரண்டாவது வாரம் வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், கரூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்டுள்ள வயல்களில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், நெல் பயிர்களில் எதிர்பார்த்த அளவில் துார் பிடிக்காமல் இருந்தது. மேலும், நெற்பயிர்களின் வளர்ச்சியும் தடைப்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு, 35 மூட்டைகள் வரை கிடைக்க வேண்டிய நெல் மகசூல், 25 மூட்டைகளாக குறைந்தது. இந்நிலையில், வைக்கோ-லுக்கு விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து, கரூர் அருகே வீரராக்கியம் பகுதியை சேர்ந்த விவசா-யிகள் கூறியதாவது: நெல் அறுவடைக்கு பிறகு, வைக்கோலை மாடுகளின் தீவனத்துக்காக தனியாக விற்பனை செய்யப்படும். கடந்தாண்டு ஒரு ஏக்கரில் கிடைத்த வைக்கோல், 6,000 ரூபாய் வரை விலை போனது. தற்போது, 4,000 ரூபாய்க்கு தான் வைக்கோல் விலை போகிறது. இதற்கு நெல் சாகுபடி அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தாலும், இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படுவதால், வைக்கோலுக்கு விலை குறைந்துள்ளது.கையால் நெல்லை அறுவடை செய்யும் போது, நீளமான வைக்கோல் கிடைக்கும். ஆனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது, வைக்கோல் நீளமாக இருக்காது. துண்டு துண்-டாகத்தான் கிடை க்கும். இதை நீண்ட நாள் பாதுகாப்பாக வைத்-திருந்த முடியாது. நீளமான வைக்கோலை, மாடுகள் தீவனத்துக்-காக அடுக்கி வைத்து பாதுகாக்க முடியும். இதனால் வைக்கோ-லுக்கு விலை குறைந்துள்ளது. ஏற்கனவே மகசூல் குறைவு, நெல் அறுவடை இயந்திரம் வாடகை அதிகரிப்பு, சாகுபடி செலவு அதி-கரிப்பு போன்ற காரணங்களால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவில் லாபம் இல்லை. இந்நிலையில், வைக்கோலுக்கும் விலை குறைந்து விட்டதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்-டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.