/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : நவ 26, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் கம்பத்தில் இருந்து
தவறி விழுந்தவர் பலி
கரூர், நவ. 26-
வெள்ளியணை அருகே, மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து, காயமடைந்தவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், மணவாடி மருதப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவர் கடந்த, 16ல் வெள்ளியணை பஞ்., அலுவலகம் பின்புறம் உள்ள, மின் கம்பத்தில் விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில், கம்பத்தில் இருந்து தவறி விழுந்த செல்வராஜ், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வராஜ் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.